கோவை தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்ச்சி முகாம் தொடக்கம்! 33 யானைகள் பங்கேற்பு!
கோவை தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்ச்சி முகாம் தொடங்கியுள்ளது.
Recommended Video

கோவை: தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்ச்சி முகாம் இன்று தொடங்கியது. இதனை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டியில் ஆண்டுதோறும் கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான முகாம் இன்று தொடங்கியது.
தமிழக அரசு சார்பில் இந்த புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது. யானைகளுக்கான இந்த புத்துணர்வு முகாம் திட்டம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டது.

அலங்கரிக்கப்பட்ட யானைகள்
தமிழகம் முழுவதிலும் இருந்து நேற்று முன்தினம் முதல் அந்தந்த கோயில்களில் இருந்து யானைகள் முகாமிற்கு புறப்பட்டன. அலங்கரிக்கப்பட்ட யானைகள் கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கு பின் புறப்பட்டன.

30 யானைகள் வருகை
முகாமிற்கு வந்த யானைகளை அதிகாரிகள் பழங்களை கொடுத்து வரவேற்றனர். இதுவரை தமிழகம் முழுவதிலும் இருந்து 32 கோவில் யானைகளும் புதுச்சேரியில் இருந்து ஒரு யானை என முகாமில் 33 யானைகள் பங்கேற்றுள்ளன.

மருத்துவ சிகிச்சைகள்
48 நாட்கள் நடக்கும் இந்த முகாமில் யானைகளுக்கு காலை மற்றும் மாலை என இரண்டு நேரம் மூலிகை கலந்த உணவு வழங்கப்படும். யானைகளுக்கு நடைபயிற்சி உள்ளிட்ட உடற்பயிற்சிகளும் அளிக்கப்படவுள்ளது. யானைகளின் உடல்நிலையை கண்காணித்து அவற்றுக்கு மருத்துவ சிகிச்சைக்களும் வழங்கப்படவுள்ளது.

அமைச்சர்கள் பங்கேற்பு
அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் யானைகளுக்கு பழங்கள் மற்றும் உணவுகளை கொடுத்து இந்த முகாமை தொடங்கி வைத்தனர். இதில் கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

குஷியில் யானைகள்
இந்த முகாம் வரும் பிப்ரவரி 20ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. கடந்த ஆண்டு கண்ணீருடன் பிரிந்த தங்களின் நண்பர்களை காணும் குஷியில் உள்ளன யானைகள்.

மூன்றடுக்கு பாதுகாப்பு
கோவில் யானைகள் முகாமுக்குள் காட்டு யானைகள் நுழையாமல் தடுக்கும் வகையில் முகாமை சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் 5 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications