போக்குவரத்து நெரிசலைக் குறைக்க... 14 ரோடுகளை அகலப்படுத்தும் சென்னை மாநகராட்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சி, நகரில் உள்ள 14 சாலைகளை அகலப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் இப்பகுதியில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெருக்கடி வெகுவாக குறையும் எனறு மாநகராட்சி கருதுகிறது.

ஏற்கனவே 24 சாலைகளை அகலப்படுத்துவதாக அறிவித்திருந்தது சென்னை மாநகராட்சி. தற்போது 14 சாலைகளை அகலப்படுத்த மாநகராட்சி முடிவு செய்து அறிவித்துள்ளது.

இந்த 14 சாலைகளில் அகலப்படுத்தும் பணி தொடர்பான ஆய்வுகள் முடிவடைந்துள்ளன. வாகனங்கள் எவ்வளவு செல்கின்றன. ஆக்கிரமிப்புகள் என்ன என்பது உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

ஜூலை மாதத்திற்குள்...

ஜூலை மாதத்திற்குள்...

அடுத்து நிலத்தை ஆர்ஜிதம் செய்த பின்னர் சாலைகள் அகலமாக்கும் பணி தொடங்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். ஜூலை மாதத்திற்குள் இது தொடர்பான பணிகள் தொடங்கும் என்று ஒரு மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

அகலமாக்கப்படவுள்ள சாலைகள்...

அகலமாக்கப்படவுள்ள சாலைகள்...

தற்போதைய திட்டப்படி சர்தார் படேல் சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை, சாந்தோம் ஹை ரோடு, பெரம்பூர் பாரக்ஸ் சாலை, ஸ்டிராஹன்ஸ் சாலை, முத்துலட்சுமி சாலை, கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலை, காளியம்மன் கோவில் தெரு, பேப்பர் மில்ஸ் சாலை, செம்பியம் ரெட் ஹில்ஸ் சாலை, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம் ஹைரோடு, ஜெயராமன் தெரு, மசூதி தெரு ஆகியாவையே அகலமாக்கப்படவுள்ள சாலைகள் ஆகும்.

போக்குவரத்து நெரிசல்...

போக்குவரத்து நெரிசல்...

பீக் அவர் நேரங்களில் இந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மிகக் கொடூரமாக இருக்கும். இப்போது இந்த சாலைகள் அகலமாவது அப்பகுதி மக்களிடையே பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளது.

கோரிக்கை...

கோரிக்கை...

இந்த சாலைகளோடு நின்று விடாமல் பிற சாலைகளையும் அகலப்படுத்தி போக்குவரத்து சமூகமாக நடைபெற சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் சென்னை மக்களின் கோரிக்கை ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+