சரியாக பரீட்சை எழுதவில்லை... ரயில் முன் பாய்ந்து பிளஸ் 2 மாணவி தற்கொலை!
சேலம்: சேலம் அருகே இயற்பியல் தேர்வு சரியாக எழுதாததால் மனமுடைந்த பிளஸ் 2 மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கூடங்கள், தேர்வுகள் அனைத்தும் மாணவர்களுக்கான தன்னம்பிக்கையை வளர்க்க உதவ வேண்டும். ஆனால், அதுவே எதிர்காலம் எனக் கருதி சரியாக படிக்கவில்லை, தேர்வு எழுதவில்லை என தற்கொலை உள்ளிட்ட தவறான முடிவுகளை எடுத்து விடுவது வருத்தம் அளிக்கின்றது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் வசந்தி (18 ) அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவி.
கடந்த வெள்ளியன்று இயற்பியல் தேர்வு எழுதினார் வசந்தி. சரியாக பாடங்களைப் படிக்காததால், தேர்வை ஒழுங்காக எழுதவில்லை என வருத்தத்தில் இருந்துள்ளார் அவர். இதனால் தொடர்ந்து பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என பெற்றோரிடம் அவர் தெரிவித்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை முதலே வசந்தியை வீட்டில் காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகளில் வசந்தியை அவரது பெற்றோர் தேடியுள்ளனர்.
அப்போது கவுண்டன்காடு என்ற இடத்தில் ரயில்வே தண்டவாளத்தில் உடல் சிதறிய நிலையில் வசந்தி சடலமாகக் கிடந்த தகவல் கிடைத்தது. அவர் அணிந்திருந்த உடையை வைத்து, பெற்றோர்கள் மாணவியை அடையாளம் காட்டினர்.
இதுகுறித்து, ஓமலூர் இரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications