1000 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ கைது
Subscribe to Oneindia Tamil
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே வீட்டு மனைப் பட்டா பெயர் மாற்றத்துக்காக ரூ. 1000 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில் அருகே உள்ள சேர்ந்தமரம் பகுதியில் வருவாய் ஆய்வாளராக இருந்தவர் முருகேசன். இவரிடம் ஒருவர் வீட்டு மனைப் பட்டா பெயர் மாற்றத்துக்காக அணுகினார். அவரிடம் ரூ. 1000 லஞ்சம் தருமாறு கேட்டுள்ளார் முருகேசன்.
அவர் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புப் போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். இன்று முருகேசன் ரூ. 1000 லஞ்சப் பணத்தைப் பெற்றபோது மறைந்திருந்த டிஎஸ்பி தங்கச்சாமி தலைமையிலான போலீஸார் முருகேசனைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications