எனக்கு என்ன மரியாதை கொடுத்திருக்கீங்க? திருநாவுக்கரசரிடம் சீறிய இளங்கோவன்
தமக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என திருநாவுக்கரசரிடம் சீறியிருக்கிறார் இளங்கோவன்.
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசரும் அவரது ஆதரவாளர்களும் தம்மை புறக்கணிக்க தொடங்கியுள்ளதாக முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சீறியுள்ளார்.
இந்திரா காந்தியின் 100-வது பிறந்த நாள் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் கொண்டாடப்பட்டாலும் கோஷ்டி கானங்கள் சூப்பராக எதிரொலித்தது.

கோஷ்டி பூசல்
திருநாவுக்கரசும் அவரது ஆதரவாளர்களும் யானைக் கவுனியிலும் இளங்கோவன் அண்ட் கோ புரசை வாக்கம் தாணா தெருவிலும் இந்திரா பிறந்த நாளை கொண்டாடினர். பின்னர் அனைத்து கோஷ்டிகளும் சத்தியமூர்த்தி பவன் கொண்டாட்டத்துக்கு வந்தன.

திருநா அழைப்பு
அங்கு வழக்கமான நிகழ்வுகள் முடிந்த உடன், இளங்கோவனிடம் காமராஜர் அரங்கத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; நீங்கள் அவசியம் வரவேண்டும் என கேட்டிருக்கிறார் திருநாவுக்கரசர்...

சீறிய இளங்கோவன்
இதற்குத்தான் காத்திருந்தேன் என்றவறாய் சீறியிருக்கிறார் இளங்கோவன்.. ஆமா நீங்க எனக்கு என்ன மரியாதை கொடுத்திருக்கிறீங்க... முன்னாள் தலைவர்... முன்னாள் மத்திய அமைச்சர்.. என்னதான் குமரி ஆனந்தன் என்னை விட சீனியர்னாலும் என் பேரைத்தான் உங்களுக்கு அடுத்து போடனும்..என பொரிந்து தள்ளியிருக்கிறார்...

வெச்சு செய்யும் திருநா கோஷ்டி
இளங்கோவனின் காட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திருநாவுக்கரசர் அமைதியாக இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார். திருநாவுக்கரசரை தலைவராக்கவே கூடாது என கங்கணம் கட்டியவர் இளங்கோவன் என்பதால் தற்போது அவரை ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் 'வெச்சு செய்கிறார்களாம்' திருநா தரப்பு.
என்றைக்கு யார் வேட்டி உருவப்படுமோ?












Click it and Unblock the Notifications