மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்: திருமாவளவன்
சேலம்: சேலத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண மத்திய அரசு, இலங்கை அரசு மற்றும் மீனவர்கள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, ‘' மதுகடைகளை மூட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மத்திய அரசு மதுவிலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும், இதனை வலியுறுத்தி வருகிற 31-ந்தேதி திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி சார்பில் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதே நாளில் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், பருப்பு, மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி உயர்வை கண்டித்தும் மக்கள் நல கூட்டு இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண மத்திய அரசு, இலங்கை அரசு மற்றும் மீனவர்கள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.
பொறியியல் பட்டதாரி பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட வேண்டும். கோகுல்ராஜ் கொலை வழக்கு மற்றும் டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றினால் தான் நியாயமான, நடுநிலையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகளுக்கு துகுந்த தண்டனை கிடைக்கும்.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் நாட்டில் தலித்துகள், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகரித்துள்ளது. தேசிய குற்ற ஆவணப் பதிவுப்படி கடந்த ஓர் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 72 தலித்துகள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒருவேளை மக்கள் நல கூட்டு இயக்கம் நாளை கூட்டணியாக உருவானால், அதன் கொள்கைகளில் உடன்பாடு உள்ளவர்களை ஏற்றுக் கொள்வோம்", என்று தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications