தெய்வமகள் காயத்ரி கொலை.... அண்ணியாருக்கு அஞ்சலி செலுத்திய டுவிட்டர்வாசிகள்
தெய்வமகள் சீரியலில் காயத்ரியை பிரகாஷ் கொலை செய்த காட்சி இன்று ஒளிபரப்பானது. அதற்கு டுவிட்டரில் அவரது ரசிகர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
சென்னை: சன்டிவியில் ஒளிபரப்பாகும் தெய்வமகள் சீரியலில் தனது அண்ணியார் காயத்ரியை பிரகாஷ் குத்தி கொலை செய்து மலையில் இருந்து உருட்டி விட்டு விட்டார். காயத்ரி இறந்து போனதாக நம்பி பிரகாஷ், குமார் போய் விட்டனர். ஆனால் காயத்ரி உயிரோடு இருக்கிறாளா? இல்லையா என்பது இயக்குநரின் கையில்தான் இருக்கிறது.
சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் தெய்வமகள் சீரியல் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. சீரியலின் மிக முக்கியமான காட்சி இன்று ஒளிபரப்பானது. தன்னையும், தன் அண்ணனையும் கொல்ல வந்த கயாத்ரியை கொழுந்தன் பிரகாஷ் குத்தி கொலை செய்து விட்டான்.
காயத்ரி ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியாகவே இருந்திருக்கும். நான் நினைத்தது போலவே சமூக வலைத்தள பக்கங்களில் காயத்ரிக்கு அஞ்சலி செலுத்தி பதிவிட்டுள்ளனர் அவரது ரசிகர்கள்.
|
அண்ணியார் கொலையா?
என்ன... இரும்புப் பெண்மணி அண்ணியார் கொல்லப்பட்டாரா... ஐயகோ. அவருக்கு அஞ்சலி என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.

கேபிளை கட் பண்ணுங்கடா
அண்ணியாரை கொன்னுட்டீங்களா? கேபிளை கட் பண்ணுங்கப்பா என்கின்றனர்.
|
நெஞ்சு வெடிக்கிறதே
அண்ணியார கொண்ணுட்டாங்களா!!! அண்ணியார் மறைவு செய்தி கேட்டவுடன் என் இதயம் வெடித்து சிதறியது என்று கூறியுள்ளார் ஒரு ரசிகர்.
|
அடுத்த அண்ணியார்
காயத்ரியை பிரகாஷ் கொண்ணுட்டானா? அப்ப தமிழ்நாட்டு வழக்கப்படி விநோ தான் அடுத்த அண்ணியார்! என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.
|
மீண்டு வருவார்
அண்ணியார் காயத்ரி மீண்டு வருவார் என்று கூறி நம்பிக்கையுடன் பதிவிட்டுள்ளார் இந்த வலைஞர். காயத்ரி மீண்டும் வருவாரா? திங்கட்கிழமை தெரியும்.

முடிவுக்கு வருமா?
காயத்ரி மரணத்திற்கு பிறகாவது ஜெய்ஹிந்த் விலாஸ் வீட்டில் அமைதி திரும்புமா? சத்யா உயிர் பிழைப்பாளா? குழந்தை என்னவாகும் என்ற கேள்விகளோடு தெய்வமகள் சீரியல் ரசிகர்கள் உறங்காமல் காத்திருக்கின்றனர் என்பதுதான் உண்மை.












Click it and Unblock the Notifications