ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கள் முறையில் தேர்வு
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு மையங்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டன.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் 27ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலுக்காக ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட எட்டு வார்டுகளில் 230 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு 230 கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப்பதிவு இயந்திரங்கள், பழுதானால் மாற்றுவதற்கு கூடுதல் இயந்திரங்கள் என 750க்கும் மேற் பட்ட இயந்திரங்கள் தேவைப்படும்.

வாக்குப்பதிவுக்கு தயார்
இதற்காக சென்னை வேளச்சேரியில் உள்ள மாநகராட்சி சமூக நலக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த 1,100 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 300 கண்ட்ரோல் யூனிட் (ஓட்டுகளை கணக்கீடும்) இயந்திரங்களும் கடந்த 7ம் தேதி புது வண்ணாரப்பேட்டையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டது. அங்கு கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்த இயந்திரங்களை மறு சீரமைத்து தயார்படுத்தும் பணி ஞாயிறன்று முடிவடைந்தது.

அதிகாரிகள் ஆய்வு
இந்த இயந்திரங்களை தேர்வு செய்யும் பணி நேற்று நடந்தது. சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான விக்ரம் கபூர் தலைமையில், தேர்தல் துறை அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டனர். இதில் வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான இயந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டன. காலை 11 மணிக்கு தொடங்கிய இப்பணி பிற்பகல் 1 மணிக்கு நிறைவடைந்தது.

அதிமுக மட்டும் பங்கேற்பு
இயந்திரங்கள் தேர்வு செய்வதற்கான கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயலலிதா சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் கலந்துகொண்டார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன் மற்றும் பெரும்பாலான சுயேச்சை வேட்பாளர்கள் கலந்துகொள்ளவில்லை.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் 28 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் வாக்குப்பதிவுக்கு 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஒரு வாக்குச்சாவடிக்கு 2 மின்னணு வாக்கு இயந்திரங்களும் மற்றும் ஒரு கண்ட்ரோல் யூனிட் இயந்திரமும் என மொத்தம் 230 வாக்குச்சாவடி மையங்களுக்கு 460 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 230 கண்ட்ரோல் யூனிட் இயந்திரங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்ட இயந்திரங்களில் வாக்குப்பதிவு அன்று ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், அதனை நிவர்த்தி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 சதவீத இயந்திரங்கள் முன்பதிவு அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

புகைப்படம் ஒட்டும் பணி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் புகைப்படம், பெயர், சின்னம் பதிவு செய்யும் பணி ஒரு சில தினங்களில் தொடங்கும் என்று தேர்தல் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

அலுவலகர்களுக்கு பயிற்சி
தேர்தல் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட உள்ள 1,191 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கடந்த 10ம் தேதி முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. 2ம் கட்டமாக அவர்களுக்கு இன்று (புதன்கிழமை) சென்னை பிராட்வேயில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications