ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: அமைச்சர்கள், எம்.பி.க்கள் என 50 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு நியமனம்
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலையொட்டி அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என 50 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஆர். கே. நகர். சட்டசபை தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக 50 பேர் நியமிக்கப்படுகின்றனர்.

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், ப.மோகன்,
பா.வளர்மதி, செல்லூர் ராஜு, காமராஜ், தங்கமணி, செந்தில் பாலாஜி, சம்பத், வேலுமணி, சின்னையா, கோகுல இந்திரா, சுந்தரராஜ், சண்முகநாதன், சுப்பிரமணியன், ஜெயபால், முக்கூர் சுப்பிரமணியன், உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, ரமணா, வீரமணி, தோப்பு வெங்கடாசலம், பூனாட்சி, அப்துல் ரஹீம், விஜயபாஸ்கர் ஆகிய அமைச்சர்களும்,
மேலும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சட்டசபை துணை தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர் சின்னசாமி, எம்.பி.க்கள் தரப்பில் அன்வர் ராஜா, டாக்டர் வேணுகோபால் ஆகியோரும், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் கமலக்கண்ணன், மகளிர் அணி செயலாளர் சுசிலா புஷ்பா, எம்.பி., இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பி.குமார் எம்.பி., மாணவர் அணி செயலாளர் எஸ். ஆர். விஜயகுமார், எம்.பி., எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் வி. அலெக்சாண்டர், அமைப்பு செயலாளர் ஆதி ராஜாராம்,
சென்னை மாநகராட்சி மேயர் சைதை. துரைசாமி, ஜே.சி.டி. பிரபாகர் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர்கள் வெங்கடேஷ் பாபு எம்.பி., நா. பாலகங்கா, ராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. டி. ஜெயக்குமார், சென்னை மாநகராட்சி துணை மேயர் பெஞ்சமின், முன்னாள் எம்.எல்.ஏ. பி. வெற்றிவேல், வி.பி. கலைராஜன் எம்.எல்.ஏ, விருகை என். ரவி உள்ளிட்டோர் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications