ஜெயக்குமாரை சாடும் மதுசூதனன் - அம்பலத்திற்கு வந்த ஒபிஎஸ் - ஈபிஎஸ் உள்ளடி சண்டை
அமைச்சர் ஜெயக்குமார் கட்சி தலைமையின் அனுமதியின்றி தான்தோன்றி தனமாக செயல்பட்டு வருகிறார் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் மதுசூதனன் கூறியுள்ளார்.
சென்னை: கட்சியில் மூத்த உறுப்பினர்கள் இருந்தால் தான் செல்லாக்காசாக ஆகி விடுவோம் என்ற பயத்தில் அமைச்சர் ஜெயக்குமார் கட்சி தலைமையின் அனுமதியின்றி தான்தோன்றி தனமாக செயல்பட்டு வருகிறார் என்று மதுசூதனன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஒபிஎஸ் ஆதரவாளராக இருந்த மதுசூதனன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதிமுக அம்மா அணி வேட்பாளராக போட்டியிட்டார் டிடிவி தினகரன். பணப்பட்டுவாடா புகாரினால் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது.
இதனிடையே பிளவுபட்டிருந்த இரு அணிகளும் இணைந்தன. ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் இணைந்தாலும் இரு அணியின் ஆதரவாளர்களும் தாமரை இலை தண்ணீர் போல ஒட்டி ஒட்டாமலேயே வலம் வருகின்றனர். இரு அணிகளும் இணைந்து இடைத்தேர்தலை சந்திக்க உள்ளதால் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த மதுசூதனன் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஆதரவாளர்கள் மோதல்
ஈபிஎஸ் அணியில் உள்ள ஜெயக்குமார் முட்டுக்கட்டை போடுகிறார். இது மதுசூதனனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே பனிப்போர் நிலவுவதாக கூறப்படும் நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இந்த மோதலை அம்பலப்படுத்தியுள்ளது.

மீனவர் வேட்பாளர்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், ஜெயக்குமாரை கடுமையாக சாடினார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று ஜெயக்குமார் கூறுகிறார். ஆனால் அதுபோன்று இதுவரை நடந்ததில்லை.

ஜெயக்குமார் முட்டுக்கட்டை
1996ஆம் ஆண்டு முதல் என்னுடைய அரசியல் பயணத்துக்கு ஜெயக்குமார் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார். நான் போட்டியிட்டு ஜெயித்து எம்எல்ஏவாகிவிட்டால் அவர் செல்லாக்காசாகி விடுவோம் என்று நினைக்கிறார்.

ஜெயக்குமார் மீது நடவடிக்கை
மீனவ மக்கள் மீது அக்கறை உள்ளது போல் காட்டிக்கொள்ளும் அவர் இதுவரை மீனவ மக்கள் முன்னேற்றத்துக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் மீது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்
தினகரன் எதையோ மனதில் வைத்துக்கொண்டு காய் நகர்த்தி வருகிறார். அது என்னவென்று தெரியவில்லை. அவரை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் கூறினார் மதுசூதனன். ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே மனக்கசப்பு இல்லை என்று கூறிவரும் நிலையில் இருவரின் ஆதரவாளர்களுக்கு இடையேயான பஞ்சாயத்தால் அதிமுகவில் நிலவும் உட்கட்சி மோதல் அம்பலத்திற்கு வந்துள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications