ஆர்கே நகரில் குவியும் கட்சியினர்... திணறும் போக்குவரத்து!
ஆர்கே நகரில் பல்வேறு கட்சியினரும் அரசியல் தலைவர்களும் திரண்டு வருவதால், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் உருவாகியுள்ளது. இத்னால் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலைக்
சென்னை: ஆர்கே நகரில் இடைதேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் அங்கு அரசியல் கட்சியினர் அதிகளவில் குவிந்து வருகின்றனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஆர்கே நகரில் நடக்கவுள்ள இடைதேர்தலை முன்னிட்டு, அனைத்து கட்சிகலீன் வேட்பாளர்களுக்கும் ஆதரவு தெரிவிக்க, அந்தந்த கட்சிகளின் ஆதரவாளர்கள் ஆர்கே நகரில் குவிந்து வருகின்றனர். இதனால் திரும்புகின்ற பக்கமெல்லாம், கட்சி கரைவேட்டி கட்டிய தொண்டர்களே இருக்கின்றனர்.
மேலும் பல கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகளின் வாகனங்கள் வந்துகொண்டே இருப்பதால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் எளிதில் செல்ல முடியாமல் பாதிப்படைகின்றனர். வேலைக்குச் செல்பவர்களால் உடனே செல்லமுடியாமல் போக்குவத்து நெரிசலில் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகிறது.