ஆர்.கே.நகர் வாக்காளரா நீங்கள்? அப்ப உங்க எடைக்கு எடை தங்கம் தரப்போறாங்களாம்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் எப்படியாயினும் வென்று விட வேண்டும் என்பதால் எடைக்கு எடை தங்கம் கொடுக்க கழகக் கட்சிகள் தயார் நிலையில் உள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.
பார்வதிபுரம்: ஆர்.கேநகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பதால் எடைக்கு எடை தங்கம் தரவும் கழகக் கட்சிகள் தயார் நிலையில் உள்ளன என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் பல முனை போட்டிகள் நிலவினால் அதிமுகவின் இரு அணிகளும், திமுகவும் நேரடியாக மோதுகின்றன. இந்நிலையில் இந்தத் தேர்தலில் மக்கள் செல்வாக்கு யாருக்கு என்பதை அறிய மூன்று கட்சிகளு்ம கடுமையாக போராடி வருகின்றன.
இதுகுறித்து குமரி மாவட்டம், பார்வதிபுரத்தில மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசுகையில், ஆர்.கே நகரில் எப்படியாயினும் வென்று விடவேண்டும் என்ற கட்டாயத்தில் கழகக் கட்சிகள் உள்ளன. இதனால் அங்குள்ள வாக்காளர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கவும் அவை தயாராக உள்ளன.
பாரம்பரியமான இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை என்றார் அவர்.