மர்ம நபர்கள் கைவரிசை.. மதுரை விளக்குத்தூண் இந்தியன் வங்கியில் ரூ.10 லட்சம் கொள்ளை!
மதுரையில் உள்ள விளக்குத்தூண் இந்தியன் வங்கிக் கிளையில் ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் உள்ள விளக்குத்தூண் இந்தியன் வங்கிக் கிளையில் ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது.
விளக்குத்தூண் இந்தியன் வங்கியில் வேலை பார்த்த மூத்த பணியாளர் ஒருவருக்கு, நேற்று பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்று இருக்கிறது. இதனால் வங்கி மாடியில் பணி ஓய்வு பாராட்டு விழாவிற்காக எல்லா பணியாளர்களும் கூடி இருக்கிறார்கள்.

அவர்கள் மேலே மாடியில் இருந்த போது, கீழே கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது. பாதுகாவலர்கள் யாரும் இல்லாததை பயன்படுத்து இந்த கொள்ளை நடந்துள்ளது.
மொத்தம் காசாளர் அறையில் இருந்த ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்ட்டு இருக்கிறது. சிசிடிவி கேமராவில் என்ன மாதிரியான விஷயங்கள் பதிவாகி இருக்கிறது என்று காலையில் இருந்து போலீஸ் சோதனை நடத்தி வருகிறது. இது அந்த பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications