ப.சிதம்பரம் வீட்டில் ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் திருட்டு.. போலீசில் புகார்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு சொந்தமான, நுங்கம்பாக்கத்தில், பெரிய வீடு ஒன்று இருக்கிறது. அவர் சென்னையில் இருக்கும் போது, இந்த வீட்டில் தங்குவது வழக்கு. இந்த வீட்டிற்கு பாதுகாப்பிற்கு காவலர்களும் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு இந்த வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ரொக்கம்,வைர, தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுமார் ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனதாக ஆயிரம் விளக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ப.சிதம்பரம் வீட்டினர் வெளியூர் சென்றிருந்த போது திருடு போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் வீட்டில் திருடிய நபர் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications