For Daily Alerts
Just In
வேலூர் அருகே துணிகரம்.. சிக்னலுக்காக நின்ற ரயிலில் புகுந்து பெண்களிடம் கத்திமுனையில் கொள்ளை
வேலூர் அருகே சிக்னலுக்காக நின்றுகொண்டிருந்த தொடர்வண்டியில் புகுந்த கொள்ளையர்கள் பயணிகளிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
வேலூர்: வேலூரை அடுத்த காட்பாடி அருகே சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த நீலகிரி எக்ஸ்பிரஸில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.
நின்று கொண்டிருந்த ரயிலில் திடீரென ஏறிய மர்மநபர்கள் அங்கிருந்த 4 பெண்களிடம் கத்தியைக் காட்டி போட்டிருக்கும் நகைகளை கழட்டும்படி மிரட்டியுள்ளனர்.
இதனால் அச்சமடைந்த அவர்கள் நகைகளை கழட்டி கொடுத்தனர். பயணிகளிடம் இருந்த பணத்தையும் அந்த மர்மக்கும்பல் பறித்துச்சென்றது.
கத்தி முனையில் ரயில் பயணிகளிடம் நகை மற்றும் பணம் பறிக்கப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
robbery in nilgris express near vellore. 4 women lost their jewel and money.
Story first published: Thursday, November 3, 2016, 10:59 [IST]