18 மாதங்களுக்கு பின் கொடநாட்டில் ஜெ... சிவப்பு கம்பளம் விரித்து உற்சாக வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

உதகமண்டலம்: 18 மாதங்களுக்குப் பின்னர் கொடநாடு வருகை தந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க.வினர் சிவப்பு கம்பளம் விரித்து மலர்தூவி பிரம்மாண்டமான உற்சாக வரவேற்பளித்தனர்.

முதல்வர் ஜெயலலிதா நேற்று காலை 11.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம் கோவைக்கு பகல் 12.20 மணிக்கு வந்தார். அங்கு தமிழக அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, எம்.எஸ்.எம் ஆனந்தன் உள்ளிட்டோர் முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்றனர்.

Rousing welcome for Jayalalithaa in Kodanad

முதல்வர் ஜெயலலிதாவுடன், தோழி சசிகலா, செயலாளர் ராமலிங்கம், பி.ஏ. பூங்குன்றன், பாதுகாப்பு அதிகாரிகள் பெருமாள்சாமி, ராஜா உள்ளிட்டோரும் வந்தனர்.

இதனைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் ஹெலிகாப்டர் மூலம் பகல் 12.50 மணியளவில் கோவை விமான நிலையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் கொடநாட்டுக்குப் புறப்பட்டனர்.

உதகையில் உள்ள கர்சன் எஸ்டேட் ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கி ஈளாடா வழியாக கொடநாடு எஸ்டேட் பங்களாவுக்கு பிற்பகல் 1.45 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா சென்றடைந்தார்.

அவரை வரவேற்க அலங்கார தோரணங்கள், வரவேற்பு வளைவுகள் என பிரம்மாண்ட ஏற்பாடுகளை அண்ணா தி.மு.க.வினர் செய்திருந்தனர். சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு சிவப்பு கம்பளம் விரித்து ஜெயலலிதாவுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

18 மாதங்களுக்கு பிறகு கொடநாடு வந்த ஜெயலலிதாவின் கார் மீது இரு புறங்களிலும் நின்ற தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+