சென்னையில் ரவுடிக்குக் கூட பாதுகாப்பு இல்லையே... சட்டம் ஒழுங்கு அவ்வளவு மோசமாவா போச்சு!
ஆவடியை அடுத்த திருமுல்லைவாயிலில் கத்தி முனையில் ரவுடி கவியரசு கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயிலில் கத்திமுனையில் ரவுடி கவியரசு கடத்தப்பட்டுள்ளார்.
கவியரசு பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கவியரசு நண்பர்கள் 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்ட ரவுடி கவியரசு மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

தமிழகத்தில் ரவுடிகள்தான் பொதுமக்களை கடத்தி வந்தனர். ஆனால் இப்போது ரவுடிகளே ரவுடியை கடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் சட்டம் ஒழுங்கு சரியாகத்தான் இருக்கிறது ஆளுங்கட்சியினர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் ரவுடியை கத்தியைக் காட்டி மிரட்டி ரவுடி கவியரசுவை கடத்தியுள்ளனர் சிலர். இது தொழில் போட்டியில் நடந்ததா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications