தூத்துக்குடியில் போலீசை வெட்டிவிட்டு தப்பிய ரவுடி... சுட்டுப்பிடித்த போலீஸ்
தூத்துக்குடியில் ரவுடியை கைது செய்ய சென்ற போது அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றான். போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்து செய்தனர்.
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடியில் குற்றவாளியை கைது செய்ய சென்ற போது அரிவாளால் வெட்டி விட்டு தப்ப முயன்றதால் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
கொலை வழக்கில் தொடர்புடைய முத்துக்குமார் என்பவரை விரட்டிப்பிடிக்க போலீசார் முயற்சி செய்துள்ளனர். பிடிக்க வந்த போலீசை அரிவாளால் வெட்டிவிட்டு முத்துக்குமார் தப்பிவிட முயன்றுள்ளார். இதில் உதவி ஆய்வாளர் டென்னிஸ், காவல் முத்தையா ஆகியோர் காயமடைந்தனர்.

முத்துக்குமார் அரிவாளால் தாக்கியதையடுத்து காவல்துறையினர் துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் முத்துக்குமார் காயம் அடைந்துள்ளார்.
முத்துக்குமார் தாக்கியதில் காயமடைந்த போலீசார் தூத்துக்குடி காவல் நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications