மதுரை நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு: பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம் உட்பட மூவர் சரண்!!
மதுரை/விழுப்புரம்: மதுரையில் குப்பைத் தொட்டியில் 11 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம் உட்பட மூன்று பேர் நீதிமன்றங்களில் சரணடைந்துள்ளனர்.
மதுரை அண்ணாநகரில் குப்பைத் தொட்டி ஒன்றில் 11 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வெடிகுண்டுகளை குப்பைத் தொட்டியில் போட்டது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மதுரை ரவுடி வரிச்சூர் செல்வம் என்பவர் மதுரையைச் சேர்ந்த மற்றொரு ரவுடி பெருசு அழகர் என்பவரை கொலை செய்ய திட்டம் தீட்டியிருந்தார். இதற்கான சென்னையை சேர்ந்த பிரவீன் என்பவரிடம் நாட்டு வெடிகுண்டுகளுக்கு 'ஆர்டர்' கொடுத்திருக்கிறார்.

பிரவீனோ மதுரையைச் சேர்ந்த ரவுடி அப்பள ராஜாவின் கூட்டாளியான இஸ்மாயில்புரம் கீரி மணி என்ற மணிமாறனிடம் வெடிகுண்டுகள் தயாரிக்க சொல்லியிருக்கிறார். இந்த நிலையில் சென்னை பிரவீன் போலீசில் சிக்க பயந்து போன கீரி மணி வெடிகுண்டுகளை குப்பைத் தொட்டியில் போட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து வரிச்சூர் செல்வம், கீரி மணி ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று மதுரை 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் வரிச்சூர் செல்வம் தனது ஓட்டுநருடன் சரணடைந்தார். அதேபோல் மற்றொரு ரவுடியான கீரி மணி என்ற மணிமாறன் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
மதுரையில் ரவுடிகள் அட்டகாசம் மீண்டும் தலை தூக்கியிருப்பது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது சரணடைந்துள்ள ரவுடி வரிச்சூர் செல்வம் உடல் முழுவதும் நகைகள் அணிந்து கொண்டு நாள்தோறும் ஃபேஸ்புக்கில் கெத்தாக புகைப்படங்கள் போட்டு பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications