ரயில்களில் பட்டாசு கொண்டு போகாதீங்க... பிடித்தால் 3 ஆண்டு சிறை
ரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் மூன்றாண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று ரயில்வே போலீசார் எச்சரித்துள்ளனர்.
சேலம்: ரயில்களில் பட்டாசு கொண்டுச் சென்றால் அதிகபட்சமாக 3 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றுத்தரப்படும் என ரயில்வே பாதுகாப்பு படையினர் எச்சரித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை வரும் 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரயில்களில் பயணிக்கும் போது பட்டாசு பார்சல்களை எடுத்து செல்ல வாய்ப்புள்ளது என்பதால், விபத்துகள் நேரிடாமல் தடுக்க பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், ஊட்டி, கரூர், ஆத்தூர் உள்ளிட்ட ரயில்வே ஸ்டேஷன்களில், பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதன்பேரில் பட்டாசுகளை ரயிலில் எடுத்து செல்ல கூடாது என அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ரயில்களில் ஆபத்தான முறையில் பட்டாசுகளை எடுத்து செல்லக் கூடாது. மீறி எடுத்து சென்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பயணிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் கூறுகையில், இந்திய ரயில்வே சட்டம் 164வது பிரிவின் படி, ரயில்களில் பட்டாசு, பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட இதர வெடிபொருட்களையும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களையும் எடுத்து செல்வது குற்றச்செயலாகும்.
இந்த சட்டத்தின்படி அதிகபட்சம் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், பட்டாசு கொண்டு செல்ல கூடாது என அறிவுறுத்தி வருகிறோம். விதிமுறையை மீறி பட்டாசு கொண்டு செல்லப்படுவது கண்டறிப்பட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications