தூத்துக்குடி: டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டை மாற்ற முயன்றவரிடம் போலீஸ் விசாரணை
தூத்துக்குடி: டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டை கொடுத்து மதுபானம் வாங்க முயன்ற ஒருவர் தூத்துக்குடியில் பிடிபட்டுள்ளார். அவரிடம் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிடிபட்ட நபரிடம் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம். இதனை முன்னிட்டு சிறிய கடைகளிலும் கூட பெருமளவிற்கு வியாபாரம் நடக்கும் இதனை சாதகமாக பயன்படுத்தி கள்ளநோட்டை புழக்கத்தில் விடும் கும்பல் ஊடுறுவி இருப்பதாக எஸ்பி அஸ்வின்கோட்னிஷ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் தனிப்பிரிவு எஸ்ஐ ஷியாம்சுந்தர் தலைமையிலான போலீசார் நேற்று முன் தினம் இரவு தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடையில் ஒருவர் மதுவாங்கிவிட்டு 500 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்துள்ளார். அந்த நோட்டை சோதனை செய்ததில் அது கள்ள நோட்டு என தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் கிடைக்கப்பெற்ற தனிப்படையினர் அந்த நபரை மடக்கினர். இதில் அவர் செய்துங்கநல்லூர் ஆர்சி தெருவை சேர்ந்த ஜெயசீலன்(57) என்பதும் அவர் 500 ரூபாய் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டதும் தெரியவந்தது.
அவரை மடக்கிய போலீசார் அவரிடம் இருந்து 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 4-யை பறிமுதல் செய்தனர். மேலும் தென்பாகம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் செய்துங்கநல்லூரில் உள்ள ஜெயசீலன் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 257ஐ பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1.30 லட்சம் ஆகும்.
மேலும் போலீசார் நடத்திய விசாரனையில் இந்த கள்ளநோட்டுகளை ஜெயலீலனுக்கு பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஒரு நபர் கொடுத்தது தெரியவந்தது. ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். மேலும் பிடிபட்டுள்ள ஜெயசீலனுக்கும் நாகர்கோவிலை சேர்ந்த ஒரு கள்ளநோட்டு கும்பலுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அதன் மூலம் ஒட்டுமொத்த கும்பலையும் பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications