வெள்ளத்தால் சென்னை விமான நிலையத்துக்கு ரூ.100 கோடி இழப்பு
சென்னை: பெரு மழை, வெள்ளத்தால் சென்னை விமான நிலையத்துக்கு ரூ.100 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் சேத விவரம் டெல்லியில் உள்ள விமான நிலைய ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஏராளமானோர் தங்கள் வீடுகளையும்,உடமைகளையும் இழந்தனர். வெள்ளம் காரணமாக சென்னை விமான நிலையமும் பாதிக்கப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீரால் விமானனநிலைய ஓடுபாதை நீரில் மூழ்கியது.

இதுகுறித்து விமானநிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,
விமான நிலையத்துக்குள் தண்ணீர் புகுந்ததால் டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து 5-ம் தேதி வரை விமானநிலையம் மூடப்பட்டது. விமான நிலையத்தில் இருந்த மின்னணு சாதனங்கள், கணினி, பயணிகள் அறிவிப்புப் பலகை , ரேடார் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் செதமடைந்தன்.

டெல்லியில் உள்ள விமானநிலைய ஆணையத்துக்கு சேத விவரம் குறித்து அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரூ.100 கோடி வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சேத மதிப்பிற்காக காத்திருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications