மதுரையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ2.94 கோடி பணம் பறிமுதல்
உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ2.94 கோடி ரொக்கம் மதுரையில் சிக்கியது.
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ2.94 கோடி பணத்தை தேர்தல் அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவதால் அத்தொகுதியில் அதிரடி வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனையின் போது செக்கானூரணியில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ2.94 கோடி ரொக்கப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் சவுத் இண்டியன் வங்கிக்கு சொந்தமான பணம் அது என தெரியவந்தது. இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றது ஏன் என்பது குறித்து விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications