குவைத்தில் இருந்து நூதன முறையில் ரூ.40 லட்சம் தங்கம் கடத்திய கேரள வாலிபர் சென்னையில் கைது
சென்னை: குவைத்தில் இருந்து சென்னைக்கு ரூ.40 லட்சம் மதிப்பு உள்ள தங்கத்தை நூதன முறையில் கடத்தி வந்த கேரள வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
குவைத்தில் இருந்து விமானம் ஒன்று புதன்கிழமை அதிகாலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிரகாஷ்(28) சுற்றுலா விசாவில் குவைத் சென்று திரும்பியிருந்தார். கோழிக்கோட்டுக்கு நேரடியாக விமானம் இருக்கையில் அவர் எதற்காக சென்னை வந்தார் என்று அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அவரின் உடைமைகளை சோதனை செய்ததில் அதில் சந்தேகப்படும்படி எதுவும் இல்லை. ஆனால் அவரின் சூட்கேஸின் கைப்பிடி மற்றும் வித்தியாசமாக இருந்தது. உடனே அதிகாரிகள் அந்த கைப்பிடியை கழற்றி சோதனை செய்தனர்.
சோதனையில் பிரகாஷ் கைப்பிடியை தங்கத்தில் செய்து அதில் வெள்ளி முலாம் பூசி நூதன முறையில் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. 1 கிலோ 350 கிராம் தங்கத்தில் ஆன அந்த கைப்பிடியின் மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும்.
அதிகாரிகள் கைப்பிடியை பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்தி வந்த பிரகாஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications