திருச்சி கட்டட விபத்தில் காயமடைந்த குழந்தைக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி.. முதல்வர் அறிவிப்பு

திருச்சி கட்டட விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைக்கு ரூ. 5 லட்சத்தை வைப்பு நிதியாக வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்சியில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் தாய், தந்தையை இழந்த
ஒன்றரை வயது குழந்தைக்கு ரூ. 5 லட்சம் நிதியை வைப்பு நிதியாக வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

மலைக்கோட்டை அருகே உள்ள குளத்தெருவில் 3 மாடி கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த கட்டடம் இன்று காலை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமடைந்தன.

Rs. 5 lakhs will be deposited for the child who loses her parents in Trichy building collapse

அப்போது இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 4 பேர் பலியாகிவிட்டனர். அவர்கள் கார்த்திக் , ஹரீஷ் (தந்தை, மகன்), தம்பதியான பழனி- ராசாத்தி தம்பதி உள்பட 4 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்நிலையில் இவர்களது ஒன்றரை வயது குழந்தை பரமேஸ்வரி சிறு காயங்களுடன் மீட்கப்பட்டது.

இந்த குழந்தைக்கு ரூ. 5 லட்சம் வைப்பு நிதியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும் வைப்பு நிதியின் மூலம் குழந்தையை பராமரிக்க ரூ.4,062 மாதந்தோறும் வட்டி கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+