செல்லா நோட்டுக்களை டிச. 30க்குப் பின்னர் வைத்திருந்தால் ரூ. 50000 அபராதம்?
செல்லாத ரூபாய் பணத்தை, 10 நோட்டுகளுக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு, ரூ.50,000 வரை அபராதம் விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: நாடு முழுவதும் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். கையில் வைத்திருக்கும் பணத்தை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்றும் டிசம்பர் 30 வரை டெபாசிட் செய்யலாம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
நவம்பர் 11ம் தேதி முதல் வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் பணத்தை டெபாசிட் செய்து வருகின்றனர். ஏடிஎம்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை எடுத்து வருகின்றனர். மோடியின் அறிவிப்புக்குப் பின்னர் சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிறு வியாபாரிகள், ஏழை, நடுத்தர மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பணத்தை டெபாசிட் செய்ய மத்திய அரசு அறிவித்த காலக்கெடு இன்னும் சில தினங்களில் முடிவடைய உள்ளது. டிசம்பர் 30ம் தேதிக்கு மேல் செல்லாத ரூபாய் நோட்டுக்களை கையில் வைத்திருக்கும் நபர்களுக்கு ரூ.50,000 வரை அபராதம் விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, ரூ.500 அல்லது ரூ.1000 நோட்டுகளில், 10க்கும் மேலாக வைத்திருப்போருக்கு இந்த அபராதம் விதிக்கப்படும் எனவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பான இறுதி அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
இதன்மூலமாக, பணப்பதுக்கலை தடுக்கவும் தீர்மானித்துள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம்












Click it and Unblock the Notifications