உள்துறை செயலர், டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பிய ஆர்.எஸ்.எஸ்.. பேரணிக்கு அனுமதி மறுப்பால் கொதிப்பு!
சென்னை: ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், நீலகிரியில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த காவல்துறை அனுமதி வழங்காததால், உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட 4 அதிகாரிகளுக்கு ஆர்.எஸ்.எஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்திய நாட்டின் 76-வது சுதந்தர தினம், விஜயதசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் 33 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மருது சகோதரர்கள் குருபூஜை மற்றும் தேவர் குருபூஜை நடைபெற உள்ளதால் இந்த மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் போலீசாரின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பேரணி நடத்திக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்தது.
மேலும், பட்டாசுகள் வெடிக்கக் கூடாது, ஊர்வலத்தில் 500 பேருக்கு அதிகமானோர் பேரணியில் பங்கேற்க கூடாது, சாதி , மத அடையாளங்களை கொண்டிருக்கும் பாடல்களை பாட அனுமதியில்லை, பிற சமுக மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ள கூடாது, கம்பு உள்ளிட்ட எந்த பொருட்களையும் பேரணியில் எடுத்து செல்ல கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்தது.
இந்நிலையில், உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும், நீலகிரி மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த காவல்துறை அனுமதி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் உள்துறை செயலாளர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால், நீலகிரி மாவட்ட எஸ்.பி. சுந்தர வடிவேல், எருமாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோருக்கு ஆர்.எஸ்.எஸ் தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தபோது, அரசு தரப்பு வழக்கறிஞர்களும் இருந்த நிலையில், டிஜிபி இதனை கவனத்தில் கொள்ளாதது நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் என்றும், உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்கும் வகையில் அனுமதி அளிக்க வேண்டும் என்றும், தவறினால் உள்துறை செயலர் உள்ளிட்ட நால்வருக்கு எதிராகவும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications