ஈழம்: பன்னாட்டு விசாரணை- பொதுவாக்கெடுப்பு ஆதரவு கட்சிகளுக்கு ஓட்டு- உருத்திரகுமாரன் வேண்டுகோள்!
சென்னை: ஈழத் தமிழர் படுகொலைக்கு பன்னாட்டு விசாரணை மற்றும் ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைக்கும் கட்சிகளுக்கு லோக்சபா தேர்தலில் தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் பன்னாட்டு விசாரணை மற்றும் பொதுஜன வாக்கெடுப்பு மையமாக கொண்டு இந்திய கட்சிகளையும் - இந்திய அரசையும் கோரும் தீர்மானம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதை விளக்கி சென்னை செய்தியாளர்களிடம் நியூயார்க் நகரில் இருந்து ஸ்கைப் மூலமாக நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் பேசியதாவது:
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்பு குற்றம், மானுடத்திற்கு எதிரான குற்றம், போர்குற்றம் ஆகியவற்றை விசாரிக்க பன்னாட்டு சுதந்திர குழுவை நிறுவ ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய அரசு தனியாகவோ அல்லது கூட்டாகவோ தீர்மானத்தை முன்மொழிய வேண்டும் .
ஈழத் தமிழர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க அனைத்துல நாடுகளின் மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு இந்திய அரசு அனைத்து வகையிலும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் . வங்காள தேசம் பிரிந்து செல்ல இந்தியா உதவியது போலவும் , தென் சூடான், கிழக்கு தீமூர் , ஸ்காட்லான்ட் போன்ற நாடுகள் பொது வாக்கெடுப்பு நடத்த இந்திய எந்த தடையும் சொல்லாதது போலவும் , தனி ஈழத்திற்க்கான பொது வாக்கெடுப்பிலும் இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும்.
ஈழத் தமிழர்களின் பிரச்னையை நிரந்தரமாக தீர்த்து வைக்க பன்னாட்டு விசாரணையும் , பொது வாக்கெடுப்பும் அவசியம் ஆகிறது . அதனால் வரும் தேர்தலில் இத்தகைய முன்னெடுப்புகளை எடுக்கக் கூடியே கட்சிகளுக்கே தமிழர்கள் வாக்களிக்க வேண்டும். இந்த கோரிக்கையை தங்கள் தேர்தல் அறிக்கையாக தமிழக அரசியல் கட்சிகள் முன்மொழிய வேண்டும்..
இந்திய நாட்டின் ஆட்சியை பிடிக்கும் கட்சிகள் ஈழத் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை கருத்தில் கொண்டு செயல்பட்டால் தமிழீழம் அமையும். அப்படி அமையும் தமிழீழ அரசு இந்தியாவிற்கு அனைத்து வகையிலும் துணை நிற்கும்.

சிங்கள அரசை போல தமிழீழ அரசு சீனாவின் பக்கம் சென்று இந்தியாவிற்கு துரோகம் இழைக்காது. தமிழக அரசும் விரைந்து தமிழீழ மக்களின் துன்பத்தை தீர்க்க அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
தமிழீழமே தீர்வு என்ற முழக்கத்தை முன்வைத்து அதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்கும் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு உருத்திரகுமாரன் கேட்டுக் கொண்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications