கவுண்டமணி குறித்து ஏன் தேவையில்லாமல் புரளி கிளப்புகிறார்கள்? #goundamani
சென்னை: நகைச்சுவை நடிகர் கவுண்டமணி குறித்து மீண்டும் ஒரு புரளி கிளம்பியுள்ளது. இதை கண்டித்துள்ளார் அவரது செய்தித் தொடர்பாளர் விஜய் முரளி.
அடிக்கடி கவுண்டமணி குறித்து திரையுலகில் சிலர் புரளி கிளப்பி வருகின்றனர். ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. திரையுலகிலிருந்தே சிலர் இவ்வாறு அடிக்கடி வதந்தி கிளப்புவதாக கூறப்படுகிரது.

நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை வகுத்துக் கொண்டு பட்டையைக் கிளப்பியவர் கவுண்டமணி. இப்போதும் கூட அவர் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, வாய்மை என பிசியாகவே உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முதல் கவுண்டமணி குறித்து வதந்தி பரவி வருகிறது. இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர் விஜய் முரளி அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவ்வப்போது கவுண்டமணி குறித்து இது மாதிரி புரளிகளை கிளப்பிவிடும் அந்த நல்ல மனிதர்கள் யார் என்று தெரியவில்லை. இதனால், அவர்களுக்கு என்ன பலன் என்றும் புரியவில்லை. சமீபத்தில்கூட புன்னகை அரசி கே.ஆர்.விஜயா குறித்து இதேபோல் வதந்திகளை பரப்பினார்கள். அவர் அறிக்கை தந்ததும் வதந்திகள் புஸ் ஆனது.
சற்று முன்புதான் அவரை சந்தித்தேன். உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கிறேன். புதிய படம் ஒன்றின் கதையை கேட்டுக் கொண்டிருக்கிறேன். விரைவில் நான் நடிக்கும படத்தின் அறிவிப்பு வெளிவரும். அந்தப் படத்தின் துவக்க விழாவில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன் என்று கூறினார். இந்தியா முழுவதும் அவரது ரசிகர்கள் யாரும் பதட்டமடைய வேண்டாம். அவர் மிகவும் நலமாக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
கவுண்டமணி பாணியில் சொல்வதானால்... ஏண்டா உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா?












Click it and Unblock the Notifications