ஏப்ரல் 14க்கு பின் அனைத்தும் சரியாகிடும்: அழகிரியை சந்தித்த எஸ்.வி. சேகர் ஆருடம்
மதுரை: ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு அழகிரிக்கு அனைத்தும் சரியாகிவிடும் என்று நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.
நடிகர் எஸ்.வி. சேகர் மதுரையில் மு.க. அழகிரியை இன்று காலை சந்தித்து பேசினார். அழகிரியை சந்தித்த பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,

நாடகம்
சிவகாசியில் நாடகம் நடத்த செல்லும் வழியில் அழகிரியை சந்திக்க வந்தேன். அரசியலை தாண்டி அவர் எனக்கு நல்ல நண்பர். அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். என்னை பாஜகவில் முழுமையாக ஏற்கவில்லை. இந்நிலையில் நாங்கள் சந்தித்து பொது விஷயங்களை பற்றி பேசினோம்.

நட்பு
டெல்லியில் உள்ளதை போன்று அரசியல் வேறு, நட்பு வேறு என்ற அடிப்படையில் தான் நான் அழகிரியை சந்தித்தேன். இதுவரை எனது நாடகத்தை காண முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி, பொன். ராதாகிருஷ்ணன், அழகிரி, ஸ்டாலின் என அனைவரும் வந்திருக்கிறார்கள். இது தான் ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும்.

அழகிரி
என்னுடைய மோதி விளையாடு பாப்பா நாடகத்தை பார்க்க வருமாறு அழகிரியை அழைத்தேன். வரும் ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு அழகிரிக்கு அனைத்தும் சரியாகிவிடும். இதை நான் ஒரு ஜோதிடர் மற்றும் நண்பர் என்ற முறையில் தெரிவிக்கிறேன்.

ஜோதிடம்
ஜோதிட கட்டத்தில் கிரகங்கள் நன்றாக இருக்கையில் யாரும் அழகிரியை கட்டம் கட்ட முடியாது. அவ்வாறு கட்டம் கட்டினாலும் அவை விலகிவிடும்.

மகிழ்ச்சி
அழகிரி தற்போது மகிழ்ச்சியாக உள்ளார். கட்சி பொறுப்பில் இருந்து அவரை நீக்கலாம். ஆனால் கருணாநிதியின் மகன் என்பதை யாராலும் நீக்க முடியாது. ஸ்டாலின், கனிமொழி ஆகியோரின் அண்ணன் என்பதையும் நீக்க முடியாது. அவர்கள் குடும்பத்தில் நான் சமரசம் ஏற்படுத்த முயலவில்லை. அவர்கள் என்றாவது ஒரு நாள் நிச்சயம் இணைவார்கள். பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி மோடி பிரதமர் ஆவார் என்றார் எஸ்.வி. சேகர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications