எதற்கு பெரியவர் படம்.. சொந்த முகத்துல வந்து சண்டை போடுங்க.. எஸ்.வி.சேகர் "நறுக்"!
அரசியல் சித்து விளையாட்டுகளுக்கு மகா பெரியவரின் படத்தை பயன்படுத்துவதா என்று எஸ்வி சேகர் எதிர்ப்பு தெரிவித்தார்.
சென்னை: அரசியல் சித்து விளையாட்டுகளுக்கு மகா பெரியவரின் படத்தை பயன்படுத்துவா என்றும் சொந்த முகத்தை ப்ரொபைல் படமாக வைத்து விட்டு சண்டையிட்டு கொள்ளுங்கள் என்றும் எஸ்.வி.சேகர் காட்டமாக தெரிவித்துள்ளார்.
மகாபெரியவரின் படத்தை ப்ரொபைல் படமாக சிலர் வைத்துள்ளது குறித்து எஸ்வி சேகர் தனது டுவிட்டரில் கூறுகையில், மஹா பெரியவரின் படம் க்கணஅரசியல் சித்து விளையாட்டு விமர்சனங்களில் profile படமாக உபயோகிக்கப்படுவது அவரின் லட்சக்கான பக்தர்களுக்கு தர்ம சங்கடத்தையும் மன வருத்தத்தையும் கொடுக்கிறது என்பதை சம்மந்தப்பட்ட மாமேதைகள் புரிந்து கொள்ள வேண்டும். Fight with Ur own face என்று தெரிவித்துள்ளார்.

இவர் யாரை குறிப்பிடுகிறார் என்று புரிகிறதா மக்களே. அதுபோல் அவர் மற்றொரு டுவீட்டையும் பதிவிட்டுள்ளார்.
மஹா பெரியவரின் படம் அரசியல் சித்து விளையாட்டு விமர்சனங்களில் profile படமாக உபயோகிக்கப்படுவது அவரின் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தர்ம சங்கடத்தையும் மன வருத்தத்தையும் கொடுக்கிறது என்பதை சம்மந்தப்பட்ட மாமேதைகள் புரிந்து கொள்ள வேண்டும். Fight with Ur own face 🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳 pic.twitter.com/jBO7ZLH8Cl
— S.VE.SHEKHER (@SVESHEKHER) December 26, 2017
அதில் அவர் கூறுகையில், சனிப்பெயர்ச்சி குருவையே ஆட்டிப்பாக்க ஆரம்பிச்சுடுச்சு போல. குருவுக்கும் நாக்குல வாக்குல சனி என்றும் எஸ்வி சேகர் குறிப்பிட்டுள்ளார்.
சனிப்பெயர்ச்சி குருவையே ஆட்டிப்பாக்க ஆரம்பிச்சுடுச்சு போல. குருவுக்கும் நாக்குல வாக்குல சனி.
— S.VE.SHEKHER (@SVESHEKHER) December 26, 2017












Click it and Unblock the Notifications