சென்னையில் டெண்டுல்கர் தன் கையால் அசெம்பிள் செய்த பி.எம்.டபிள்யூ–5 சீரிஸ் கார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ‘இந்தியாவில் தயாரிப்போம்' என்ற முன்முயற்சியைக் கொண்டாடும் வகையில் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின், சென்னை கார் நிறுவனத்தில் என்ஜினீயர்களுடன் இணைந்து ‘பி.எம்.டபிள்யூ - 5 சீரிஸ்' என்ற காரை அசெம்பிளிங் செய்வதில் ஈடுபட்டார்.

SACHIN TURNS ENGINEER: ASSEMBLED LUXURY CAR

சென்னைக்கு அருகே செங்கல்பட்டில் மகேந்திரா வேர்ல்ட் சிட்டியில் பி.எம்.டபிள்யூ. கார் நிறுவனம் இயங்கி வருகிறது. ‘கிரிக்கெட் கடவுள்' என ரசிகர்களால் அழைக்கப் படும் பிரபல கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் இங்கு சென்றிருந்தார்.

SACHIN TURNS ENGINEER: ASSEMBLED LUXURY CAR

அப்போது, ‘இந்தியாவில் தயாரிப்போம்' என்ற முன்முயற்சியைக் கொண்டாடும் வகையிலும், இந்திய சந்தைக்கான உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், .எம்.டபிள்யூ. கார் நிறுவனத்தின் ‘அசெம்பிளி லைன்'களில் என்ஜினீயர்களுடன் இணைந்து ‘இந்திய ஆட்டோ காம்போனென்ட் சப்ளையர்'களின் உதிரிபாகங்களை பயன்படுத்தி ஒரு ‘பி.எம்.டபிள்யூ-5 சீரிஸ்' என்ற காரை சச்சின் உருவாக்கினார்

SACHIN TURNS ENGINEER: ASSEMBLED LUXURY CAR

பின்னர், இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசுகையில், "நீண்ட காலமாக இந்த நிறுவனத்தின் காரை பயன்படுத்தி வருகிறேன். என் கையால் ஒரு காரை உருவாக்குவது என்பது மறக்க முடியாதது. அடுத்த முறை நான் இந்த நிறுவனத்தின் காரில் செல்லும் போது நான் ஒரு காரை உருவாக்கினேன் என்று பெருமையுடன் சொல்லுவேன்'' என்றார்.

SACHIN TURNS ENGINEER: ASSEMBLED LUXURY CAR

நிகழ்ச்சியில் அந்த நிறுவனத்தின் இந்திய தலைவர் பிலிப் வான் சர், சென்னை மேலாண்மை இயக்குனர் ராபர்ட் பிரிட்ராங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+