சகாயம் விசாரணைக் குழுவில் ஆஜராக இருந்த புகார்தாரருக்கு கொலை மிரட்டல்!
மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பான ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான விசாரணைக் குழுவில் ஆஜராக இருந்தவருக்கு மர்மநபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளது மதுரை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் கிரானைட் முறைகேடு குறித்து சகாயம் தலைமையிலான விசாரணை தொடங்க உள்ளது. அந்த விசாரணையில் மேலூர் குமார் நகரில் வசிக்கும் முருகேசன் (58) என்பவரும் ஆஜராக உள்ளார்.
இந்நிலையில், முருகேஷனுக்கு மர்மநபர்கள் சிலர் ஆயுதங்களுடன் நேரில் சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து முருகேசன் மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் கிரானைட் முறைகேடு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அப்போது, மதுரை ஆட்சியராக இருந்த சகாயத்திடமும் ஆதாரங்களுடன் புகார் அளித்திருந்தேன். தற்போது, நீதிமன்ற உத்தரவின்படி கிரானைட் முறைகேடு குறித்து சகாயம் விசாரணை நடத்த உள்ளார்.
இந்தநிலையில், கடந்த 7 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் 2 கார்களில் ஆயுதங்களுடன் வந்த 4 பேர் கொண்ட ஒரு கும்பல் என் வீட்டின் கதவை தட்டி எழுப்பினர். சகாயம் நடத்தும் விசாரணையில் நீ கலந்து கொள்ளக் கூடாது. மீறி நீ அதில் கலந்து கொண்டால் உன்னை கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டிவிட்டு சென்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.
முருகேஷன் அளித்த புகாரின் அடிப்படையில் மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், முருகேஷனுக்குப் போலீசார் பாதுகாப்பும் அளித்துள்ளனர். இதற்காக இரண்டு போலீசார் சுழற்சி முறையில் சாதாரண உடையில் கைத் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications