கிரானைட் முறைகேடு புகார்களின் உண்மைத் தன்மை – சகாயம் தலைமையிலான குழு ஆய்வு
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் உண்மைத் தன்மை குறித்து சகாயம் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது.
கிரானைட் முறைகேடு தொடர்பாக இதுவரை 600 க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள், காவல்துறையின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அதன்பேரில் மதுரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மீதமுள்ள புகார்களில் குற்றத்திற்கான முகாந்திரம் குறித்து சகாயம் குழு ஆய்வு செய்து வருகிறது.
மேலும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான சாட்சியங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் போதுமானவையாக இருக்கிறதா என்றும் அக்குழு ஆலோசனை செய்து வருகிறது.












Click it and Unblock the Notifications