தம்பிதுரைக்காக சென்னையில் இருந்து கரூர் வந்து வாக்கு கேட்ட சைதை துரைசாமி
கரூர்: கரூரில் திமுக வேட்பாளர் சின்னச்சாமியிடம் கடும் போட்டியில் உள்ள அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்காக அத்தொகுதியில் சென்னை மேயர் சைதை துரைசாமி வாக்கு சேகரித்தார்.
கரூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து கரூர், அரவக்குறிச்சி, சீத்தப்பட்டி காலனி, சின்ன தாராபுரம், தென்னிலை, வேலாயுதம்பாளையம், பசுபதிபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் சென்னை மேயர் சைதை துரைசாமி மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் ஆனால் மட்டுமே தமிழக தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். காவிரி நீர் பிரச்சனை, கச்சத்தீவு பிரச்சனை, தமிழக மீனவர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.
இந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் 40 பேரும் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் அதிக எம்.பி.க்களை கொண்ட கட்சி என்ற முறையில் முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வருவார். அப்போது தான் தமிழக உரிமைகள் மீட்கப்படும், பாதுகாக்கப்படும். அவை எல்லாம் உங்கள் கையில் தான் உள்ளது வாக்குகளாக என்றார்.
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உடன் இருந்தார்.












Click it and Unblock the Notifications