இப்படி ஒரு கலெக்டர் நெல்லைக்குக் கிடைத்திருந்தால் 4 உசிரு போயிருக்காதே!
சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினியின் தனது நடவடிக்கையால் அதிரடி காட்டி வருகின்றார்.
Recommended Video

சேலம்: ஆட்சியர் ரோகினியின் தனது நடவடிக்கையால் அதிரடி காட்டி வருகின்றார். இதனால் அவருக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டத்தின் 171 ஆவது கலெக்டராக ரோகினி ராம்தாஸ் கடந்த ஆகஸ்ட்டு மாதம் பதவியேற்றார். இவர் சேலம் மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டர் ஆவார்.
ரோகினி, 2008-ம் ஆண்டில் நடைபெற்ற ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று, திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் சப்-கலெக்டராக தனது பணியை தொடங்கினார். அப்போது தாமிரபரணி ஆற்றில் இரவு நேரத்தில் மணல்திருட்டில் ஈடுபட்டவர்களை மடக்கிபிடித்து பாராட்டுக்களைப் பெற்றார்.

கிலியை கிளப்பும் ஆட்சியர்
சப் கலெக்டராக இருந்தபோதே கெத்து காட்டிய ரோகினி சேலம் கலெக்டராக பொறுப்பேற்றதில் இருந்து பின்னி பெடலெடுத்து வருகிறார். சேலம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற முதல் நாளே மக்களுக்கு தேவையான வசதிகள் அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு நடத்தி கிலியை கிளப்பினார்.

மாற்றுத்திறனாளிகளிடம் உறுதி
மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக நாற்காலிகள் உள்ளிட்டவற்றை வழங்கினார். அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து நடவடிகை எடுப்பதாக உறுதியளித்தார் ஆட்சியர் ரோகினி.

ஆச்சரியப்பட்ட மக்கள்
மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்க அவர்களுக்கு சமமாக தரையோடு தரையாக அமர்ந்து குறைகேட்டார் ஆட்சியர். ஆட்சியர் ரோகினியின் இந்த நடவடிக்கை மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஆசிரியராக மாறிய ஆட்சியர்
ராஜபாளையம் அருகே பள்ளி மாணவர்கள் வெளியில் விளையாடியதை காரில் செல்லும் போது பார்த்த ஆட்சியர் ரோகினி பள்ளிக்கு சென்றார். ஆசிரியர்கள் அனைவரும் ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு சென்றதை அறிந்த அவர் ஆசிரியராக மாறி குழந்தைகளுக்கு பாடம் நடத்தினார்.

ரூ.15 லட்சம் அபராதம்
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் டெங்கு குறித்து ஆய்வு செய்த அவர், கொசு உற்பத்திக்கு காரணமான தனியார் பஸ் நிறுவனத்துக்கு 15 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். அவரது நடவடிக்கைக்கு மக்களிடையே ஆதரவு பெருகியுள்ளது.

விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்
மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ரோகிணி விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். அரசுப் பள்ளியில் படித்த இவர் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று நெல்லை சேரன் மாதேவியில் சப் கலெக்டராக பணியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications