காலக் கொடுமை... டூவீலர்கள் திருடிய 12, 17 வயது 4 சிறுவர்கள் கைது!
சேலம்: சேலத்தில் இரு சக்கர வாகனங்கள் திருடிய 4 சிறுவர்கள் போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர்.
சேலம் நகரிலுள்ள நெத்திமேடு காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் தன் வீட்டின் முன் நிறுத்திவைத்திருந்த இரு சக்கர வாகனம் கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போனது.
இதேபோல, செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த தண்டாயுதபாணி சனிக்கிழமை அன்னதானப்பட்டியில் உள்ள ஒரு தேநீர்க் கடை முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்று, திரும்பி வந்துபோது அவரது வாகனம் திருடப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இருவரும் சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், சனிக்கிழமை மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், சந்தேகப்படும் வகையில் அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த 4 சிறுவர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
12 முதல் 17 வயது வரை உள்ள அந்த 4 சிறுவர்களும் அந்தப் பகுதியில் இரு சக்கர வாகனங்களைத் திருடியது தெரியவந்தது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சிறுவர்கள் நால்வரும் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.
மேலும், அவர்களிடமிருந்து திருடப்பட்ட இரண்டு இரு சக்கர வாகனங்களையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.












Click it and Unblock the Notifications