சேலம் இரும்பு வியாபாரி வீட்டில் 720 சவரன் நகைகள் கொள்ளை - வீடியோ
சேலம் அருகே கிச்சிப்பாளையத்தில் இரும்பு வியாபாரி வீட்டில் 720 பவுன் நகை மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சேலம் : சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் இரும்புக் கடை நடத்தி வருகிறார் விஜயலட்சுமி, அவரது கணவர் உயிரிழந்ததால் விஜயலட்சுமி தன்னுடைய சகோதரர் பாஸ்கருடன் இணைந்து வியாபாரத்தை கவனித்து வருகிறார். அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 720 பவுன் நகை மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கிச்சிப்பாளையம் பகுதியில் வசிக்கும விஜயலட்சுமி திருப்பதி சென்று விட்டு காலையில் வீட்டிற்கு வந்து பார்த்த போது அறையில் இருந்த பீரோவில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.

மர்ம நபர் பீரோவை சாவி போட்டு திறந்து நகைகளை கொள்ளையடித்ததோடு, போலீசிடம் புகார் அளிக்கக் கூடாது என்ற மிரட்டலோடு பீரோ அருகே பில்லி சூனியம் வைத்து சென்றுள்ளனர்.
நகை, பணம் கொள்ளை போனது பற்றி கிச்சிப்பாளையம் போலீசாரிடம் விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார். இதனையடுத்து கொள்ளையில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கதவு,ஜன்னல் எதுவும் உடைக்கப்படாத நிலையில் நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவத்தில் பணியாளர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனார்.












Click it and Unblock the Notifications