2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிப்பு.. சேலம் அருகே சோகம்
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் அருகே பழனியம்மாள் என்பவர் தனது 2 குழந்தைகளுடன் தீக்குளித்து இருக்கிறார். இதனால் மூவரும் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
சேலத்தில் இருக்கும் எடப்பாடி பகுதியில் இருக்கும் ஒருவாப்பட்டி காட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள். இவர் குடும்பத்தில் கடந்த சில நாட்களாக பிரச்சனை நிலவி வந்து இருக்கிறது.

இந்த பிரச்சனை காரணமாக மனமுடைந்த பழனியம்மாள் தற்கொலை செய்ய முடிவெடுத்து இருக்கிறார். இதனால் தன் குழந்தைகள் சந்துரு(7), ஸ்ரீஜா(5) இரண்டு பேருடன் சேர்ந்து தீயிட்டுக் கொண்டு உள்ளார்.
மூன்று பேரும் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர்.
இவர்களின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. போலீஸ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications