மாட்டு வண்டியில் மணல் திருட்டு... பலமிழக்கும் கரூர் காவிரிக்கரை: வீடியோ
காவிரி நதிக்கரையில் அனுமதியில்லாமல் மணலை மாட்டு வண்டியில் அள்ளிச் செல்கின்றனர் என காவிரி பாதுகாப்பு இயக்கித்தினர் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
கரூர்: காவிரி ஆற்றிலிருந்து மாட்டு வண்டியில் சட்டத்துக்கு புறம்பாக மணல் அள்ளிச் செல்வதைத் தடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் காவிரி பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மனு அளித்தனர்.
கரூரில் காவிரி ஆற்றங்கரையிலிருந்து சட்டத்துக்குப் புறம்பாக மாட்டி வண்டியில் மணல் அள்ளிச் செல்கின்றனர். தற்போது அரசே மணல் குவாரிகளிலில் இருந்து மணல் தந்துகொண்டிருக்கும் நிலையில் திருட்டுத்தனமாக மணலை அள்ளி விற்று வருகின்றனர்.

காவிரி ஆற்றின் படுகையில் அனுமதிக்கப்படாத இடங்களில் எல்லாம் மணல் அள்ளின்பால், பெரு வெள்ளத்தின்போது தண்ணீர் ஊருக்குள் வரும் அபாயம் ஏற்படும் என சூழலியல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில், காவிரியிலிருந்து மாட்டு வண்டியின் மூலம் மணல் அள்ளிச் செல்கின்றனர் என காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் சண்முகம் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளார். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications