தசரா கூட்ட நெரிசலில் 33 பேர் பலி: சரத்குமார் இரங்கல்
சென்னை: பீகார் மாநிலம் பாட்னாவில் தசரா பண்டிகை கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த விபத்தில் 33 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு சமத்துவமக்கள் கட்சித்தலைவரும் எம்.எல்.ஏவுமான சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சரத்குமார் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற தசரா பண்டிகை கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்பது மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது.

இதுபோன்ற மக்கள் அதிகமாக கூடும் நிகழ்ச்சிகளுக்கு அரசும், காவல்துறையும் அதிக கவனம் செலுத்தி தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருக்க வேண்டும்.
மகிழ்ச்சியாக கொண்டாடும் இத்தகைய நிகழ்ச்சிகளில் இதுபோன்ற சம்பவங்களால் விழாக்களின் முக்கியத்துவம் இழந்து சோகமாக முடிவடையும் சூழ்நிலை உருவாகிறது.
இத்துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications