நான் மட்டும் போலீஸாக இருந்திருந்தால்.... இன்னேரம் சுட்டு தள்ளியிருப்பேன்... சரத்குமார் ஆவேசம்
நான் மட்டும் போலீஸாக இருந்திருந்தால் காஷ்மீர் சிறுமி விவகாரத்தில் தொடர்புடையவர்களை சுட்டு தள்ளியிருப்பேன் என்று சரத்குமார் தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

செக்ஸ் எஜிகேஷன் முக்கியம் ! சரத்குமார் பரபர- வீடியோ
புதுக்கோட்டை: நான் மட்டும் போலீஸாக இருந்திருந்தால் காஷ்மீர் சிறுமி விவகாரத்தில் தொடர்புடையவர்களை சுட்டு தள்ளியிருப்பேன் என்று சரத்குமார் தெரிவித்தார்.
காஷ்மீரில் 8 வயது சிறுமி ஒரு வாரமாக அடைத்து வைக்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 3 மாதங்கள் கழித்து இந்த சம்பவம் வெளியே வந்தது. இதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து சரத்குமார் புதுக்கோட்டையில் கூறுகையில் பாலியல் குற்றங்களுக்கு சவுதியில் வழங்குவதைப் போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
அப்போதுதான் தப்பு செய்ய வேண்டும் என்று நினைக்கும்போதே பயம் வரும். நான் மட்டும் போலீஸாக இருந்திருந்தால் சிறுமியை கொலை செய்தவர்களை சுட்டு தள்ளியிருப்பேன் என்றார் சரத்குமார்.












Click it and Unblock the Notifications