காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நடந்தே டெல்லி செல்வேன்... சரத்குமார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நடந்தே டெல்லி செல்வேன்-சரத்குமார்

    சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நடந்தே டெல்லிக்கு செல்வேன் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

    காவிரி விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த உத்தரவை மத்திய அரசு இன்னும் செயல்படுத்த முன்வரவில்லை என்பது தமிழக அரசின் குற்றச்சாட்டாகும்.

    Sarathkumar says what he will do if Cauvery Management board not constitute

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசும், அமைக்கக் கூடாது என்று கர்நாடக அரசும் கங்கணம் கட்டிக் கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனிடையே தமிழகத்திலும், பெங்களூரிலும் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன.

    நாடாளுமன்றத்திலும் அதிமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடுவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளது.

    இந்நிலையில் இதுகுறித்து சரத்குமார் கூறுகையில், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்காவிட்டால் தமிழகத்திலிருந்து டெல்லிக்கு நடந்தே செல்வேன் என்று சரத்குமார் தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+