For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொதுக்குழு கூட்டம்... வழக்கு நிலுவையில் உள்ளதால் சரத், ராதாரவிக்கு அழைப்பு இல்லை: விஷால் கறார்

வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டத்திற்கு, முன்னாள் தலைவர் சரத்குமார் மற்றும் பொதுச்செயலாளர் ராதாரவிக்கு அழைப்பு அனுப்பப்பட மாட்டாது என தற்போதைய பொதுச்செயலாளர் வ

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இம்மாதம் நடைபெற உள்ள நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டத்திற்கு சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் மற்றும் பொதுச்செயலாளர் ராதாரவிக்கு அழைப்பு அனுப்பப்பட மாட்டாது என தற்போதைய பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் வருகிற 27ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மூத்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

Sarathkumar will not be called for general body meeting: Vishal

ஆனால், இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் மற்றும் பொதுச்செயலாளர் ராதாரவிக்கு அழைப்பு அனுப்பப்பட மாட்டாது என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் கூறுகையில், "27ம் தேதி நடைபெறும் நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி, நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், முன்னாள் பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோருக்கு அழைப்பு அனுப்ப மாட்டோம்.

இது எனது தனிப்பட்ட முடிவு கிடையாது. நடிகர் சங்கத்திலிருந்து இருவருமே தற்காலிமாக நீக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும், இருவரும் சம்பந்தப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அழைப்பு அனுப்பும் முடிவு இல்லை" என்றார்.

English summary
Actors association general secretary actor Vihsal has clearly said that the invitation for association's general meeting will not be send to Sarathkumar and Radha ravi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X