ஜானகி எம்.ஜி.ஆர்... ஜெயலலிதா.. தமிழ்நாட்டின் 3வது பெண் முதல்வராகிறார் சசிகலா
ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் 3வது பெண் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் சசிகலா.
சென்னை: அதிமுகவைச் சேர்ந்த ஜானகி ராமச்சந்திரன் மற்றும் ஜெயலலிதாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் மூன்றாவது பெண் முதல்வராக சசிகலா பொறுப்பேற்க உள்ளார்.
அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர் 1987ம் ஆண்டு மறைந்த போது, அவரது மனைவி வி.என். ஜானகி முதல்வராக பொறுப்பேற்றார். இவர்தான் தமிழ்நாட்டின் முதல் பெண் முதல்வர். இதனைத் தொடர்ந்து கட்சியில் ஜெயலலிதா பிரிவு ஜானகி பிரிவு ஏற்பட்டது. அப்போது நடைபெற்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து ஜானகி அதிமுகவை ஜெயலலிதாவிடம் ஒப்படைத்துவிட்டு அரசியலில் இருந்து விலகினார்.

இதனைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார் ஜெயலலிதா. ராஜீவ் காந்தி பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த போது அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையின் அனுதாப அலைகள் முழுவதும் ஜெயலலிதாவை தமிழ் நாட்டின் இரண்டாவது பெண் முதல்வராக ஆக்கியது. 6 முறை முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் தேதி மறைந்தார்.
இதனை அடுத்து அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம், அதிமுகவின் 3வது பெண் தலைவராக உயர்ந்துள்ள சசிகலா, தற்போது சட்டசபைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 3வது முதல்வராகவும் பொறுப்பேற்க உள்ளார்.
தமிழகத்தில் இதுவரை இருந்த பெண் முதல்வர்கள் அனைவருமே அதிமுகவைச் சேர்ந்தவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications