அதிருப்தியாளர்களை சமாளிக்கிறாராம் சசி- செங்கோட்டையன் உள்ளிட்டோருக்கு கட்சி பதவி!
அதிமுக அமைப்புச் செயலர்களாக செங்கோட்டையன், சைதை துரைசாமி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: அதிமுகவில் தமக்கு எதிராக இருக்கும் அதிருப்தியாளர்களுக்கு கட்சி பதவி கொடுத்து சமாதானப்படுத்தியுள்ளார் சசிகலா. அதிமுக அமைப்புச் செயலர்களாக கே.ஏ.செங்கோட்டையன், சைதை துரைசாமி, கோகுல இந்திரா, கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவின் பொதுச்செயலர் பதவியை சசிகலா கபளீகரம் செய்ய முயற்சித்தபோது அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அப்போது அதிருப்தியாளர்களுக்கு ஆட்சியிலும் கட்சியிலும் பதவி வழங்கப்படும் என மன்னார்குடி தரப்பு உறுதியளித்திருந்தது.

தற்போது முதல்வர் நாற்காலியில் அமருவதற்கும் மும்முரமாக இருக்கிறார் சசிகலா. இந்த நிலையில் திடீரென சசிகலா தலைமையை ஏற்க மறுத்து ஒதுங்கி இருந்த பலருக்கும் திடீரென கட்சி பதவிகளை அள்ளிக் கொடுத்துள்ளார் சசிகலா.
அதிமுகவின் புதிய அமைப்புச் செயலாளர்களாக கே.ஏ. செங்கோட்டையன், சைதை துரைசாமி, கோகுல இந்திரா, கருப்பசாமி பாண்டியன், சோமசுந்தரம், வரகூர் அருணாசலம், நரசிம்மன், நிறைகுளத்தான். அன்பழகன் அண்ணாமலை, உமாதேவன், புத்திசந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக மீனவர் பிரிவு செயலராக அமைச்சர் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், அதிமுக கொள்கை பரப்பு துணை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications