எடப்பாடி வென்றதை.. சிறை டிவியில் பார்த்து ரசித்த சசிகலா.. போனிலும் வாழ்த்து!
தமிழக சட்டசபையில் நேற்று நடந்த நிகழ்ச்சிகளை பரப்பன அக்ரஹாரா சிறையில் பார்த்து ரசித்தார் சசிகலா. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்ற பெற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு போன் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக சட்டசபையில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதனை பரப்பன அக்ராஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா டிவியில் பார்த்து ரசித்தாராம்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 எம்எல்ஏக்கள் ஆதரவு பெற்று வெற்றி பெற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு தொலைபேசி மூலம் சசிகலா வாழ்த்து கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறையில் சசிகலா
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று உள்ள சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையில்அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறையில் சாதாரண அறையே ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு தொலைக்காட்சி வசதி இல்லை.

டிவி பார்த்த சசிகலா
சனிக்கிழமையன்று டிவி பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று வியாழக்கிழமை இரவே சிறை அதிகாரிகளிடம் சசிகலாவும் இளவரசியும் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து சசிகலா, இளவரசி ஆகியோருக்கு வேறொரு அறையில் டிவி பார்க்க அனுமதி வழங்கப்பட்டது.

சசிகலா வாழ்த்து
சட்டசபை நிகழ்ச்சிகளை டிவியில் பார்த்த சசிகலா மகிழ்ச்சியடைந்தாராம். இதனையடுத்து அவரை காண வந்த வழக்கறிஞர்களை சந்தித்த சசிகலா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடமும், அமைச்சர்களிடம் தொலைபேசி மூலம் பேசி வாழ்த்து கூறினாராம். நேற்றிரவு 7 மணி வரை சில ஆலோசனைகளையும் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வகுப்பு அறை
சசிகலாவிற்கு முதல் வகுப்பு அறை ஒதுக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வயதாகி விட்டதாலும் நோய் பாதிப்பு உள்ளதாலும் முதல் வகுப்பு அறை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். முதல் வகுப்பு அறையில் டிவி, கட்டில் , ஒரு மின் விசிறி எல்லாம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிமோட் கண்ட்ரோல் அரசு
தமிழக அரசை சிறையில் இருந்து சசிகலா இயக்குவார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. எதிர்கட்சியினர் பினாமி அரசு என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர். அது உண்மைதான் என்று கூறும் வகையில் நேற்றே சசிகலா தொலைபேசி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்களுக்கு தொலைபேசி மூலம் ஆலோசனை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications