மயக்கமா, கலக்கமா.. மனதிலே நடுக்கமா.. சசி குரலிலும், முகத்திலும் ஒரு பீதி தெரியுதே!!
கடந்த சில நாட்களாக காணப்பட்ட பிரகாசம் குறைந்து சசிகலா முகத்தில் ஒரு விதமான நடுக்கம் தெரிவதாக பேச்சு கிளம்பியுள்ளது.
சென்னை கடந்த 2 நாட்களாக சசிகலாவின் குரலில் பீதி தெரிகிறது. அவரது முகம் இருண்டுள்ளது. நம்பிக்கை இழக்க ஆரம்பித்து விட்டாரோ என்ற சந்தேகம் வரும் வகையில் அவர் காணப்படுகிறார்.
முதல்வர் பதவியை அடைந்தே தீர வேண்டும் என சசிகலா பிடிவாதமாக உள்ளார். இதற்காக அதிமுக எம்எல்ஏக்களின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக அதிமுக எம்எல்ஏக்களை கூவத்தூரில் அவரது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். தமிழக மக்கள் இதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற நாள் முதல் எழுதி வைத்தே படித்து வந்த சசிகலா கடந்த செவ்வாய்க்கிழமை முதல்வர் ஓபிஎஸ் கூறிய அதிரடி குற்றச்சாட்டுகளால் நள்ளிரவு ஒன்றேகால் மணிக்கு செய்தியாளர்களிடம் பேசினார்.

கண்களை உருட்டி புருவங்களை உயர்த்திய சசி
முதல் முறையாக செய்தியாளர்களை எந்த பேப்பரும் இன்றி சந்தித்த அவர் கண்களை உருட்டி புருவங்களை உயர்த்தி மிக தைரியமாக பேசினார். ஓபிஎஸ் மீது கட்சி ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்க்கமாக கூறினார்.

பேச்சில் தெனாவட்டு
எம்எல்ஏக்கள் அத்தனை பேரும் அவருக்கு சாதகமாக இருந்ததால் அவர் பேச்சில் தெனாவட்டு தெரிந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக ஓபிஎஸ் அணிக்கு மாறும் அதிமுக எம்பிக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மன்னார்குடி கும்பல் அதிர்ச்சியடைந்துள்ளது.

முகத்தில் தெளிவு இல்லை
கடந்த 2 நாட்களாக செய்தியாளர்களை சந்திக்கும் சசிகலாவின் முகத்தில் தெளிவு இல்லை. எதையோ பறிகொடுத்தது போன்ற சோகம் ஆட்கொண்டு அவரது முகத்தில் இருள் சூழ்ந்துள்ளது.

குரளில் நடுக்கம், தழுதழுப்பு
அவ்வப்போது குரலை உயர்த்தி பேசினாலும் குரலில் ஒரு நடுக்கமும் தழுதழுப்பும் தெரிகிறது. ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு பெருகி வருவதால் மன்னார்குடி கும்பலுக்கு பீதி ஏற்பட்டதன் வெளிப்பாடும், ஆட்சியமைக்க முடியாமல் போய்விடுமோ என்ற பீதியும் தான் இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
நம்பிக்கை இழக்க ஆரம்பித்து விட்டாரோ ஜெயலலிதாவின் முன்னாள் தோழி?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications