போயஸில் ஜெ. மயங்கிக் கிடந்ததை தமிழக அரசு அறிக்கையில் சேர்த்தது யார்? பரபர பின்னணி
சென்னை போயஸ் கார்டனில் செப்.22-ல் ஜெயலலிதா மயங்கிக் கிடந்த நிலையில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தமிழக அரசு அறிக்கையும் உறுதி செய்திருப்பது சசிகலா குடும்பத்தை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளத
சென்னை: போயஸ் கார்டனில் ஜெயலலிதா மயங்கிக் கிடந்த நிலையில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் தமிழக அரசு அறிக்கையில் இடம்பெற்றிருப்பது சசிகலா மற்றும் அவரது உறவினர்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாம்.
ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக விளக்கம் தருகிறோம் என தமிழக அரசு அறிக்கைகளை வெளியிட்டது. இந்த அறிக்கைகள்தான் இப்போது விஸ்வரூபமெடுத்துள்ளது.
அதுவும் அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கையில் போயஸ் கார்டனில் ஜெயலலிதா மயக்கமடைந்திருந்தார். அந்த நிலையில்தான் ஆம்புலன்ஸில் ஏற்றினோம் என்ற தகவல் பெரும் பிரளயத்தைக் கிளப்பியுள்ளது.

டெல்லியில் இருந்து ரிப்போர்ட்
அப்பல்லோவின் அறிக்கை, எய்ம்ஸ் அறிக்கை இரண்டையும் வைத்து தமிழக அரசு சார்பில் ஒரு அறிக்கையை டெல்லியில் இருந்தபடியே சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தயார் செய்தார். இந்த அறிக்கையை தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனுக்கும் அனுப்பி வைத்தார்.

மயக்க நிலையும் சேர்ப்பு
அப்பல்லோ மற்றும் எய்ம்ஸ் அறிக்கைகளைப் பார்த்த கிரிஜா வைத்தியநாதன், தமிழக அரசு அறிக்கையில் ஒரு திருத்தம் செய்தார். அதில் ஜெயலலிதா போயஸ் கார்டனில் மயக்கமடைந்த நிலையில் இருந்தார் என்பதையும் சேர்த்துவிட்டார். தமிழக அரசே இப்படி அதிகாரப்பூர்வமாக சொன்னால் யார் யாருக்கு சிக்கல் வரும் என்பதையும் அவர் தெரிந்தே கிரிஜா வைத்தியநாதன் சேர்த்தார் என கூறப்படுகிறது.

கறுப்பு ஆடுகள்
அத்துடன் டெல்லியில் ராதாகிருஷ்ணன் இந்த அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசுவதற்கு முன்னதாகே தமிழக அரசின் செய்தித் தொடர்பு துறை மூலமாக அனைத்து ஊடகங்களுக்கும் உடனே அனுப்பி வைக்கவும் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டார். ஆனால் சில கறுப்பு ஆடுகள் இப்படி ஒரு வாசகம் இருக்கிறதே என சசிகலா உறவினர்களுக்கு போட்டுக் கொடுத்தனர்.

அதிர்ச்சியில் சசி குடும்பம்
தினகரனும் திவாகரனும் இந்த வாசகத்தை எடுக்க வைக்க படாதபாடுபட்டனர். ஆனால் இந்த முயற்சி எதுவும் கை கூடவில்லை. இதனால் தற்போது அப்பல்லோ மட்டுமல்ல தமிழக அரசும் உறுதியாக சொல்லிவிட்டது சென்னை போயஸ் கார்டன் பங்களாவில் ஜெயலலிதா மயங்கிக் கிடந்தார் என்பதை. இது சசிகலா குடும்பத்தை அதிர்ச்சியடை வைத்துள்ளது. இந்த மயக்கம் எதனால் ஏற்பட்டது? அல்லது ஏற்படுத்தப்பட்டதா? என்பது உரிய விசாரணையில் தெரியவரும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications