எம்ஜிஆர், ஜெயலலிதா செய்யாததை செய்த சசிகலா.. எதிர்ப்புக்கு காரணம் கூறும் அதிமுக எம்எல்ஏக்கள்
சென்னை: அதிமுகவில் வாரிசு அரசியலை அறிமுகம் செய்ததால்தான் சசிகலாவை எதிர்ப்பதாக அதிமுக எம்எல்ஏக்கள் தெரிவித்தனர்.
தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் முருகுமாறன் (காட்டுமன்னார்கோவில் தொகுதி) ராமச்சந்திரன் (குன்னம்), கனகராஜ் (சூலூர்), சண்முகம் (கிணத்துக்கடவு), பாண்டியன் (சிதம்பரம்), கஸ்தூரி வாசு (வால்பாறை)அம்மன் அர்ஜுன் (கோவை தெற்கு) ஆகியோர் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.

முருகுமாறன் மற்றும், ராமச்சந்திரன் ஆகியோர் அளித்த பேட்டியில் கூறியதாவது: பொதுச் செயலாளர் பதவிக்கான விதி என்ன என்பது எங்களுக்கு தெரியும். அதனை வெற்றிவேல் (டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ) சொல்லி தர வேண்டியதில்லை. வெற்றிவேல் எங்களுக்கு கழக விதிமுறை தெரியாது என்கிறார். முருகுமாறனும் வழக்கறிஞர், அருண்மொழி தேவனும் வழக்கறிஞர். எங்களை போன்ற உண்மை விசுவாசிகளை அவர்கள் புறம் தள்ளுகிறார்கள்.
அதிமுகவில் எம்.ஜி. ஆர் ஜானகியை வாரிசாக்கவில்லை. ஜெயலலிதாவும் தனதுத சொந்தங்களான தீபாவையோ, தீபக்கையோ வாரிசாக்கவில்லை.
ஆனால் தற்போது பொதுச் செயலாளர் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு அவரது உறவினர் தினகரனை கட்சி பதவியில் நியமித்தது தவறானதாகும். வாரிசு அரசியலை அதிமுகவிற்குள் புகுத்தியதால் சசிகலாவை எதிர்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications